background img

புதிய வரவு

தெலங்கானா பிரச்சனை: பிரதமருடன் ஆந்திர முதல்வர் திடீர் சந்திப்பு


பிரதமர் மன்மோகன் சிங்கை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

அப்போது தெலங்கானா பிரச்சனை மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை ஆகியவை குறித்து அவர் பிரதமருடன் ஆலோசித்ததாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாகவும், கிரண்குமார் ரெட்டி பிரதமரிடம் எடுத்துரைத்தார் என்றும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts