background img

புதிய வரவு

ராஜஸ்தான்: கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் பலி


ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், பாலி ஆகிய நகரங்களில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதிகளில் விற்ற கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு பார்வை மங்குதல், வாந்தி-பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல். அவர்களில் ஒரு பெண் உள்ளிட்ட 13 பேர் பலியானார்கள்.

மேலும் 30-க்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு, . இச்சம்பவம் தொடர்பாக, 9 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts