background img

புதிய வரவு

பாலிவுட்டிலும் அசத்துவேன்: டாப்சி நம்பிக்கை

தென் இந்தியா சினிமாவை கலக்கி வரும் வெள்ளாவி பொண்ணு டாப்சி, இப்போது இந்தியிலும் கால் பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அசத்தியது போல் இந்தியிலும் அசத்துவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

லூதியா‌னாவை சேர்ந்த டாப்சி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படத்திலேயே தமிழக ரசிகர்களின் மனதில் குடியேறிய அவர் இப்போது ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர் பலரும் தப்சியுடன் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தி படத்திலும் நடிக்க டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1981ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் கலந்த காமெடி படமான ஜாஸ்மி பதூர் என்ற படம் ரீ-மேக் செய்யப்படுகிறது. இப்படத்தை டைரக்டர் டேவிட் தவான் இயக்குகிறார். இதில் நாயகியாக டாப்சி நடிக்க இருக்கிறார்.

இந்தி படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறியதாவது, இந்தி படத்தில் நடிப்பது மிகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் தீப்தி நாவல் நடித்த கேரக்டரில் நான் நடிக்க இருக்கிறேன் என்றது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த படம் இந்தியில் எனக்கொரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். நிச்சயமாக இந்தியிலும் அசத்துவேன். என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts