background img

புதிய வரவு

ஆஞ்சநேயருக்கு வடைமாலை ஏன்?

கோவில்களிலும், வீடுகளிலும் விசேஷ நாட்களின்போது சுவாமிக்கு வடை செய்து நைவேத்தியம் செய்வார்கள். அதேபோல், ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏன் அவருக்கு மட்டும் விசேஷமாக வடைமாலை சாற்றுகிறார்கள் தெரியுமா?

ராமாயணப் போர்க்களத்தில் அரக்கர்களை வடை தட்டுவதுபோல தட்டி சம்ஹாரம் செய்தவர் ஆஞ்சநேயர். அதை நினைவுபடுத்தும் வகையிலேயே அவருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. திருப்பதி போன்ற கோவில்களிலும் வடை நைவேத்தியம் செய்கிறார்கள்.

இந்த நிவேதன வடைகளை, அவை எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து, அதிக பருமன் இல்லாமல் பக்குவமாக தயார் செய்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வடை மாலையை இஷ்ட தெய்வங்களுக்கு சாத்துவதும் உண்டு. இந்த மாலையில் உள்ள வடைகள் கர கரவென்று இருக்கும். இதை உட்கொள்கிறவர்களுக்கு புத்தி பலம், தைரியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts