உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டு மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உள்பட 3 ரசிகர்கள் காயம் அடைந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள உலக போட்டி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே விற்பனை தொடங்கியதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் ரசிகர்கள் சிதறி ஓடியதால் அருகில் இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பெண் உள்பட 3 ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள உலக போட்டி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. அதிகாலை முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே விற்பனை தொடங்கியதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனால் ரசிகர்கள் சிதறி ஓடியதால் அருகில் இருந்த மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பெண் உள்பட 3 ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment