background img

புதிய வரவு

பிடிச்சிருந்தா மட்டும்தான் ஒத்துக்குவேன் : தரிஷா

பொதுவாகவே எனக்கு பிடிக்காத எந்தவொரு விஷயத்திலும் நான் ஈடுபாடு காட்ட மாட்டேன். விளம்பரமாக இருந்தால்கூட எனக்கு பிடித்திருந்தால் மட்டும‌ே நடிக்க ஒத்துக்குவேன், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கோடம்பாக்க கன்னிகளிலேயே அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து, அதிக அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷாதான். ஒரு படத்துக்காக 40 நாட்கள் முதல் 6 மாதம், 7 மாதம் என கால்ஷீட் வழங்கி சிலபல லட்சங்களை சம்பளமாக பெறுவதை விட, ஓரிரு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து, கோடிகளில் புரள யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதனால்தான் பிரபல கம்பெனிகள் அணுகினால் மறுக்காமல் ஓ.கே. சொல்லி, ஓரிரு நாட்கள் மட்டும‌ே நடைபெறும் சூட்டிங்கில் பங்கேற்று சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம நட்சத்திரங்கள்.

எதிலுமே வித்தியாசமான பாலிசியை கடைபிடிக்கும் த்ரிஷா, இந்த விஷயத்திலும் வேறுபட்டு நிற்கிறார். குளிர்பானம், சோப்பு, ஜவுளிக்கடை என பல்வேறு விளம்பரங்களில் பளீச்சென தோன்றி, சில நொடிகளில் ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, விளம்பரப் படங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், "விளம்பரங்களில் நடிப்பது எனக்குப் பிடித்தமான விஷயம்தான். ஆனாலும் அதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளேன். காரணம், தெரியாத பொருளுக்கு அல்லது தீமை விளைவிக்கும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த எனக்குள்ள இமேஜைப் பயன்படுத்த மாட்டேன். நான் விளம்பரப் படுத்தும் பொருள் எனக்கு பிடித்திருக்க வேண்டும். எனக்கு நன்கு தெரிந்து அல்லது நான் பயன்படுத்தும் பொருள்களுக்கு மட்டும்தான் விளம்பர மாடலாக இருப்பேன்," என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts