background img

புதிய வரவு

வக்கீல் நோட்டீசு அனுப்பினார்: தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு என் பெயரை வைப்பதா? பாப்பாடகி லேடிககா கண்டனம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தாய்ப்பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு லேடிககா என பெயரிடப்பட்டுள்ளது.மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த ஐஸ்கிரீமை பிரபல நிபுணர் மாட் ஓ கார்னர் தயாரித்துள்ளார்.

இந்த ஐஸ்கிரீமுக்கு தன்பெயரை வைத்துள்ளதற்கு கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடிககா கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் தாய்ப்பால் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யும் கான்னருக்கு தனது வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பியுள்ளார்.

அதில், பிரபல பாப்பாடகி லேடிககாவின் பெயரில் உணவு பொருள் விற்பனை செய்யப்படுகிறது.தாய்ப்பாலில் வைரஸ்கள் மற்றும் மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் கிருமிகளும் இருக்கலாம். இதனால் மனிதநலத்துக்கு தீங்கானவையாக மாறலாம். இதன்மூலம் இவரது (லேடிககா) பெயருக்கு புகழுக்கும் களங்கம் ஏற்படும்.

எனவே, இந்த ஐஸ்கிரீமுக்கு சூட்டுப்பட்டுள்ள அவரது பெயரை மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், இதை ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் கார்னர் மறுத்துள்ளார்.உலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான லேடிககா ஒரு சாதாரண ஐஸ்கிரீம் கடைக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.ஆனால் அவர் இதை மறுத்து விட்டார்.

குழந்தை பேச ஆரம்பித்தவுடன் சொல்லும் வார்த்தை “க..க..” எனதான் வரும். அதைதான் எங்கள் ஐஸ்கிரீமுக்கு வைத்துள்ளோமே தவிர அவரது பெயரை அல்ல. எனவே ஐஸ்கிரீம் பெயரை மாற்ற முடியாது. அவரது வழக்கை சந்தித்து வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts