background img

புதிய வரவு

காதலியை சுட்டு விட்டு காதலன் தற்கொலை

உத்தரபிரதேசம் மாநிலம் சித்தாபூரைச் சேர்ந்தவர் அபாய்வர்மா. அதே ஊரைச் சேர்ந்தவர் நீத்துவர்மா, எம்.பி.ஏ. பட்டதாரி. இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அபாய்வர்மா கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவருக்கு பழைய காதலியை மறக்க முடியவில்லை.

நேற்று நீத்து வர்மா வீட்டில் இருந்தபோது அபாய்வர்மா அவரை பார்ப்பதற்காக வந்தார். ஆனால் நீத்துவர்மா அவரை பார்க்க விரும்பவில்லை. வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் என்னை ஏன் பார்க்க வந்தாய்? வீட்டை விட்டு வெளியே செல் என்று திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அபாய்வர்மா துப்பாக்கியை எடுத்து நீத்துவர்மாவை துப்பாக்கியால் சுட்டார். அவரது உடலில் குண்டு பாய்ந்தது. உடனே நீத்துவர்மா அங்கிருந்து ஓடிச்சென்று ஒரு அறைக்குள் புகுந்து கொண்டு தாளிட்டு கொண்டார். ஆனாலும் அபாய்வர்மா மீண்டும் சுட்டார். அந்த குண்டு அவர் மீது படவில்லை. குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனால் அபாய்வர்மா தப்பி ஓடினார். அங்கிருந்த கோவில் அருகே சென்ற அவர் திடீரென துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டுக்கொண்டார். இதில் அந்த இடத்திலேயே அவர் உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த நீத்து வர்மா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மோசமாக உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts