background img

புதிய வரவு

தயாரிப்பை தொடர்ந்து இயக்குநராக அவதரிக்கிறார் சிம்ரன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிம்ரன், புதிதாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கும் இருக்கும் நிலையில், இப்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார்.

வி.ஐ.பி., அவள் வருவாளா, ஜோடி, கண்ணெதிரே ‌தோன்றினாள், வாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகள் நடித்த சிம்ரன், தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட சிம்ரன், ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். டி.வி., சீரியல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தான் சிம்ரனுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இதனால் நடிப்பிற்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமா தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார். முதற்கட்டமாக இந்தியில் பிளாக்பஸ்டரான படம் ஒன்றை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். விரைவில் படத்திற்கான இயக்குநர் மற்றும் நடிகர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் படத் தயாரிப்புகளுடன், டைரக்ட் பணியை செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. நிறைய படங்களில் நடித்திருப்பதால் அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து என்னால் படம் இயக்க முடியும். தற்போது படம் இயக்குவதற்கான கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். விரைவில் ஒரு தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக உங்கள் முன் தோன்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts