background img

புதிய வரவு

கவர்ச்சிக்கும் ஓகே சொன்ன சோனியா!

செல்வராகவனை விவாகரத்து செய்த பிறகு, கண்ணியமான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த நடிகை சோனியா அகர்வால், இப்போது தனது கொள்கையில் தாராள தள்ளுபடியைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளாராம்.


விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள சோனியா அகர்வாலுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்தன. அவற்றில் பல செக்ஸியான வேடங்கள். ஆனால் நல்ல சம்பளம். ஆனாலும் அப்போது நடிக்க மறுத்துவிட்டார் சோனியா.

குறிப்பாக தெலுங்கில் நிறைய படங்கள். மூன்று படங்களை மட்டும், அதுவும் கவுரவமான வேடங்களில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டிருந்தார். இனி முக்காடு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர்.

இதன் விளைவு இனி எந்த வேடத்துக்கும் வேடத்துக்கும் ஓகே என்று முன்பு வாய்ப்புக் கொடுக்க வந்த அத்தனை பேருக்கும் சொல்லியனுப்பிவிட்டாராம். நல்ல வேடத்தோடு வரும் ஐட்டம் பாட்டு என்றாலும் ஓகேவாம்!

அடுத்த சில தினங்களில் சோனியா அகர்வாலின் ஒரு அதிரடி கவர்ச்சி ஆல்பம் உலா வரக் கூடும்!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts