background img

புதிய வரவு

இந்தியா-சீனா எல்லையில் 14-ந்தேதி நிலநடுக்கம் ஏற்படும்; இலங்கை விஞ்ஞானி கணிப்பு

இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக் கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது:-

கடந்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு மேல் உள்ள பூகம்பங்கள் குறித்து நானும் எனது குழுவினரும் ஆய்வு செய்து எதிர்காலத்தில் நடக்கும் பூகம்பங்கள் குறித்து கணித்து உள்ளோம்.

ஜப்பானில் கடந்த மாதம் நடந்த பூகம்பத்தையும், இந்த மாதம் சில நாட்களுக்கு முன்பு நடந்த பூகம்பத்தையும் எற்கனவே கணித்து கூறி இருந்தேன். அடுத்த சில நாட்களில் மேலும் சில பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருகிற 14-ந்தேதியில் இருந்து 16-ந்திக்குள் இந்தியா-சீனா எல்லை பகுதியில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்படும்.

ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து 20-ந்தேதிக்குள் ஜப்பானில் மீண்டும் ஒரு பூகம்பம் ஏற்படும். வருகிற 17-ந்தேதிக்குள் இந்தோனேசியா நாட்டில் ஜாவா, சுமத்ரா தீவுகளில் பூகம்பம் ஏற்படும்.

அதே போல துருக்கி, ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கையில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் இந்தோனேசிய பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கையில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts