நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்ட விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம்,
’’சென்னையில் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
அது தொடர்பாக அந்த வாக்குச்சாவடியில் நாங்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளையும், தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் நாங்கள் பார்த்தோம். அவர் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தெரியவில்லை.
அதுதொடர்பாக தேர்தல் பார்வையாளரும் புகார் கூறவில்லை. இருந்தாலும், அந்த வீடியோ பதிவை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளோம்.
அங்கு மறுவாக்குப்பதிவு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்’’ என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம்,
’’சென்னையில் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
அது தொடர்பாக அந்த வாக்குச்சாவடியில் நாங்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளையும், தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் நாங்கள் பார்த்தோம். அவர் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தெரியவில்லை.
அதுதொடர்பாக தேர்தல் பார்வையாளரும் புகார் கூறவில்லை. இருந்தாலும், அந்த வீடியோ பதிவை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளோம்.
அங்கு மறுவாக்குப்பதிவு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்’’ என்று கூறினார்.
0 comments :
Post a Comment