background img

புதிய வரவு

டெல்லியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை மர்ம மனிதன் தாக்குதல்

டெல்லியில் உள்ள தவுலா கான் என்ற இடத்தில் ராம்லால் ஆனந்த் கல்லூரி உள்ளது. இங்கு பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி கஷ்பிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்று காலை கஷ்பிதா கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். கல்லூரிக்கு அருகே உள்ள நடைமேம்பாலத்தில் அவர் நடந்து வந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென அவர் முன்பு வந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து கஷ்பிதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். அவரை ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். கஷ்பிதாவை சுட்டக் கொன்றவர் யார்? காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டாரா? என்று தெரிய வில்லை. அவரை சுட்ட போது நடைபாலத்தில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் அலறி அடித்து ஓடினார்கள்.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தலைநகரம் டெல்லியில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts