background img

புதிய வரவு

தே.மு.தி.க. விருப்ப மனு விஜயகாந்த் பெயரில் 600 பேர் மனு தாக்கல்

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி. க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பிறகு தே.மு. தி.க. போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் அறிவிக்கப்படும்.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர் களிடம் கடந்த 2-ந்தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்து வருகின்றனர். இன்றும் ஏராளமானோர் மனு செய்தனர். நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயசிங், ராஜலிங்கம் ஆகியோர் நாகர்கோவில் தொகுதியிலும் செல்வராஜ் திருப்பத்தூர் தொகுதியிலும் மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தூரேசுவரன் திருச்சி, திருவையாறு, திருவெறும்பூர் தொகுதியிலும் போட்டியிட மனு செய்தனர்.

இதேபோல நல்லதம்பி எழும்பூர், திரு.வி.க. நகர் தொகுதிகளுக்கும், செந்தா மரை கண்ணன் பெரம்பூர் தொகுதிக்கும் யுவராஜ் அண்ணாநகர் தொகுதிக்கும், கவுன்சிலர் சரவணன் துறைமுகம் தொகுதிக்கும். போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து உள்ளனர். இன்று மதியம் வரை 4700 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதில் விஜயகாந்த் போட்டியிட வலியுறுத்தி 600 பேர் பல தொகுதிகளையும் குறிப்பிட்டு மனு கொடுத்துள்ளனர். மனு கொடுக்க நாளை கடைசி நாள் ஆகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts