background img

புதிய வரவு

மின்சார அடுப்பில் எரித்து 3 வயது சிறுவனை கொன்ற தாய்

அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான்.

தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts