சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார். இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
0 comments :
Post a Comment