background img

புதிய வரவு

அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு! பல கைதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்

இலங்கையில் அனுராதபுரம் சிறையில் கைதிகள் மீது சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல கைதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 50 சிறைக் கைதிகள் தங்கள் போதுமான வசதிகளை செய்து தரக் கோரி ஞாயிற்றுக் கிழமை பட்டினிப் போராட்டம் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது கலவரம் வெடித்ததாகவும், அதன் பிறகு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் கைதி கொல்லப்பட்டதாக சிறை அதிகாரி உறுதி செய்திருக்கிறார் என்றாலும், பல கைதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதாக தமிழ்நெட் செய்தி கூறுகிறது. திங்கட்கிழமை இரவு வரை சிறைக்குள் எவரும் அனுமதிக்கப்படாததால், எந்த தகவலையும் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆனால் பல கைதிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts