இலங்கை காவல்துறையில் மேலும் ஆயிரம் தமிழர்கள் சேர்ப்பு
இலங்கை காவல் துறையில் தமிழ் மக்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மேலும் 1,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை காவல் துறையினர் நேர்முக தேர்வுகளை தொடங்கியுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உதவிப் பரிசோதகர், காவலர்கள், காவல்துறை வாகன ஓட்டிகள் ஆகிய பதவி காலியிடங்களுக்கு தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், வடபகுதியில் இருந்து இணைத்துக்கொள்ளப்படும் இவர்கள் வடபகுதியில் சேவையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவ்வட்டரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அண்மையில் 336 தமிழ் இளைஞர்களையும், 16 தமிழ் பெண்களையும் இலங்கை காவல்துறையில் அரசு இணைத்திருந்தது.
இதனிடையே, இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் அரசியல் நாச சதிகள் உள்ளதாகவும், துணை இராணுவக் குழுக்களை காவல் துறையினுள் நுழைக்க அது முற்படுவதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment